Pages

Wednesday, March 30, 2011

"மக்களது பணம் மக்கள் நல வாழ்வுக்கே "

"மக்களது பணம் மக்கள் நல வாழ்வுக்கே "
(People's money for People's welfare)
எனச சொல்வது மட்டுமல்ல செய்வதிலும் காட்டும் நிறுவனம் எல்.ஐ. சி. ஆகும். பொதுத் துறை நிறுவனமான இந்த இன்சூரன்சு நிறுவனம் மக்களிடம் இருந்து பெறும் பிரிமியத் தொகைகளை நாட்டின் நல்ல திட்டங்களுக்கு ஆக்க பூர்வமான முதலீடுகள் செய்து அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும் செயல் பட்டு வருகிறது.  

அண்மையில் சென்னை அருகே திருநின்றவூர் கசுவா கிராமத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஏழைச் சிறுவர்களுக்கு உண்ண உணவளித்து, பிளஸ் டூ வரை இலவசக் கல்வி புகட்டும் தொண்டு நிறுவனமான சேவாலய பள்ளிக்கு அதன் பொன் விழாக் காலத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டி, அதன் துவக்க விழா வரும் 2.4.2011 அன்று நடைபெறும் என்று ஒரு வரவேற்பு மடல் எனக்கு வந்து இருக்கிறது. 
மண்டல மேலாளர் திரு எம். ஆர். குமார் அவர்கள் எல்.ஐ.சி. யின் உதவியால் கட்டப்பெற்ற இந்த ஜி. எல். எப். (GOLDEN JUBILEE BLOCK) கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்கள்.  
நான் நாற்பது ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனமும், எனது நாற்பது ஆண்டுகட்கு மேலே எனது நண்பர் திரு ரமணி அவர்களை தொடர்பு அலுவலர் ஆக கொண்ட சேவாலயா நிறுவனமும் சேர்ந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு நல்லிதயம் கொண்ட எல்லோரும் வாழ்த்துவர் .

பள்ளித தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்ற பாரதியின் வாக்கு பலித்திருக்கிறது.

சேவாலயா நிறுவனர்களுக்கும் அதில் தொண்டாற்றும் எல்லா ஊழியர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

1 comment:

  1. ஒரு நல்ல செயலை வெளிக்கொணர்ந்தமைக்குநன்றி1

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி