Pages

Tuesday, May 10, 2016

குடிகாரனிடம் ஒரு பிரார்த்தனை

தமிழகத்தில் இன்னமும் ஏழே நாட்களில் பொது தேர்தல் நடக்க இருக்கின்றது.

 யார் ஆட்சியைப் பிடித்தாலும் சரி, ஆண்டாலும் சரி,  தமிழ் மக்கள் முன்னே, குறிப்பாக, தமிழ்ப் பெண்டிர் முன்னே இது ஒரு பிரச்னை தான் முழுமையாகத் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்து நிலவி இருக்கிறது.

அதுதான் மதுவிலக்குப் பிரச்னை.

பள்ளி படிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் பள்ளி முடிந்ததும் டாஸ்மாக் கடை முன்னே நிற்கும் காட்சி பார்க்க, மனம் நொந்து போகிறது.  கல்லூரி மாணவிகள் சிலர் குடிப்பதை ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகக் கருதும் நிலையும் பள்ளி மாணவிகள் பள்ளிகளை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலையையும் இந்நாட்களில் படிக்க வேதனைக்கு எல்லை இல்லை.

கடந்த ஐம்பது வருடங்களில் நாலைந்து தலை முறைகள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி தம் வாழ்வையும் மதிப்பையும் கௌரவத்தையும் இழந்து இருப்பது வெள்ளிடை மலை.

இதற்கு ஒரு விடியல் உண்டா !!



ஆஸ்திரிலேயா நாட்டில் வாழும் தமிழ் வலை உலகப பதிவாளர்
திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
தமிழ் மக்களுக்காக ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

குடிக்கும் குடிகாரனிடம் ஒரு பிரார்த்தனை .


திருமதி கீதா மதிவாணன் அவர்கள் கவிதை
அதை நான் மதுரைத் தமிழன் அவர்கள்  பதிவிலே கண்டேன்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.


இன்றைய தமிழ் நாட்டுச் சூழ்நிலையிலே இதை விட ஒரு சிறப்பான கவிதை இருக்க முடியாது.

இந்த அற்புத மனதைத் தொடும் கவிதையை
சுப்பு தாத்தா பாடுகிறார்.

திருமதி கீதா மதிவாணன் அவர்கள் பாடுவதற்கு அனுமதி தருவார் என
எதிர்பார்க்கிறேன்.

தமிழ் நாடு முன்னைய சிறப்பு பெற வேண்டுமெனின்
குடிப்பழக்கம் அடியோடு நிறுத்தப்பட வேண்டும்.

வரும் அரசு இதைச் செய்யவேண்டும்.

தமிழ்ப் பெண்டிரைக் காப்பாற்ற வேண்டும்.

2 comments:

  1. தன்யளானேன் சுப்பு தாத்தா.. இசையோடு பாடல் அருமை. இதைவிட பெரும்பேறு எனக்கென்ன இருக்கமுடியும்.. என் மகிழ்வின் பட்டியலில் தொடரும் மகிழ்ச்சி இது. மிகவும் நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  2. அருமை தாத்தா பொருத்தமான இசை

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி